Tuesday 26 July 2016

satham illatha


11 comments:

  1. ஆடியோ வீடியோ எதுவுமே கிடைக்கவில்லை.

    அந்த இடமே ஒரே இருட்டாக உள்ளது. :)

    ”இருட்டு உள்(ளு)
    முரட்டுப் பொண்ணு
    சுருட்டுப் பாய்”

    என்ற பழமொழியை நினைவூட்டியது. :)

    ’சொதப்பல் திலகம்’ அவர்களுக்கு என் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  2. சப்தம் இல்லாத தனிமை கேட்டேன் ...
    https://www.youtube.com/watch?v=MHohPH_stiU

    சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்....
    https://www.youtube.com/watch?v=ZKpuYG69ukA

    ReplyDelete
    Replies
    1. இந்த இணைப்புகளிலும் அந்தப்பாடல் கிடைக்கவில்லை. அந்த பாடலின் அடிப்படையில் யாரோ ஏதோ லெக்சர் கொடுப்பது மட்டுமே கேட்க முடிகிறது.

      Delete
  3. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

    சீ...
    ---
    சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
    யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

    ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
    ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

    உயிரைக்கிள்ளாத உறவை கேட்டேன்
    ஒற்றைக் கண்ணீர்த் துளியை கேட்டேன்

    வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
    வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

    இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
    இளமை கெடாத மோகம் கேட்டேன்

    பறந்து பறந்து நேசம் கேட்டேன்
    பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

    புல்லின் நுனியில் பனியை கேட்டேன்
    பூவின் மடியில் படுக்கை கேட்டேன்

    தானே உறங்கும் விழியை கேட்டேன்
    தலையை கோதும் விரலை கேட்டேன்

    நிலவில் நனையும் சோலை கேட்டேன்
    நீல குயிலின் பாடல் கேட்டேன்

    நடந்து போக நதிக்கரை கேட்டேன்
    கிடந்து உருள புல்வெளி கேட்டேன்

    தொட்டு படுக்க நிலவை கேட்டேன்
    எட்டி பறிக்க விண்மீன் கேட்டேன்

    துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
    தூக்கம் மணக்கும் கனவை கேட்டேன்

    பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
    பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

    மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
    பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

    உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
    ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

    வானம் முழுக்க நிலவை கேட்டேன்
    வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்

    எண்ணம் எல்லாம் உயர கேட்டேன்
    எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

    கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
    காமம் கடந்த யோகம் கேட்டேன்

    சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
    சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

    உச்சந்தலைமேல் மழையை கேட்டேன்
    உள்ளங்காலில் நதியை கேட்டேன்

    பண்கொண்ட பாடல் பயில கேட்டேன்
    பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்

    நன்றி கெடாத நட்பை கேட்டேன்
    நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்

    மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்
    மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்

    நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்
    நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்

    விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
    அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

    ஏகாந்தம் என்னோடு வாழ கேட்டேன்
    எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

    பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
    சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

    ராஜராஜனின் வாளை கேட்டேன்
    வள்ளுவன் எழுதிய கோலை கேட்டேன்

    பாரதியாரின் சொல்லை கேட்டேன்
    பார்த்திபன் தொடுத்த வில்லை கேட்டேன்

    மாயக் கண்ணன் குழலை கேட்டேன்
    மதுரை மீனாக்ஷி கிளியை கேட்டேன்

    சொந்த உழைப்பில் சோற்றை கேட்டேன்
    தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்

    மழையை போன்ற பொறுமையை கேட்டேன்
    புல்லை போன்ற பணிவை கேட்டேன்

    புயலை போன்ற துணிவை கேட்டேன்
    இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்

    இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
    துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

    தொலைந்துவிடாத பொறுமையை கேட்டேன்
    சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

    சொன்னால் சாகும் தேகம் கேட்டேன்
    கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

    காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
    சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

    சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
    மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

    போலியில்லாத புன்னகை கேட்டேன்
    தவழும் வயதில் தாய் பால் கேட்டேன்

    தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
    ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்

    ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
    காசே வேண்டாம் கருணை கேட்டேன்

    தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
    கூட்டுக்கிளிபோல் வாழ கேட்டேன்

    குறைந்தபட்ச அன்பை கேட்டேன்

    இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
    இதிலே எதுவும் நடக்கவில்லை

    வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
    மரணம் மரணம் மரணம் கேட்டேன்

    ReplyDelete
  4. படம்: அமர்க்களம்

    பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

    வரிகள்: வைரமுத்து

    இசை: பரத்வாஜ்

    ReplyDelete
  5. வீட்டில் குழந்தைகல்லாம் வராங்கன்னு சொல்லியிருந்தீங்க.... எப்படி சீக்கிரமாக வந்துட்டிங்க.... ஆடியோ வீடியோ செம சோதப்பலுதான்... பாடல் வரிகள் எவ்வளவு நல்லா இருக்குல்ல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 26 July 2016 at 21:44

      //வீட்டில் குழந்தைகல்லாம் வராங்கன்னு சொல்லியிருந்தீங்க.... எப்படி சீக்கிரமாக வந்துட்டிங்க....//

      அவர்களின் வருகை இன்று நள்ளிரவு மட்டுமே.

      அவர்களை வரவேற்பதற்கான ஆயத்த வேலைகள் இப்போதும் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

      //ஆடியோ வீடியோ செம சோதப்பலுதான்...//

      ஆமாம்.

      //பாடல் வரிகள் எவ்வளவு நல்லா இருக்குல்ல....//

      மிகவும் அழகாகவும், இன்றைய தேதிக்கு, நம் இருவருக்குமே ஏதோ ஒருவிதத்தில் பொருத்தமாகவும் உள்ளது. நன்றி.

      Delete
  6. பாடல் வரிகள் மனதை குத்தி கிழிக்குது...எப்படித்தான் யோசிக்க முடிகிறதோ....க்ரேட்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:08

      //பாடல் வரிகள் மனதை குத்தி கிழிக்குது...எப்படித்தான் யோசிக்க முடிகிறதோ....க்ரேட்.....//

      !!!!!!!!!! க்ரேட் லைக் யூஊஊஊஊ ஒன்லி !!!!!!!!!!

      Delete
  7. !!!!!! க்ரேட் லைக் யூஊஊஊஊ ஒன்லி !!!!!!!!!!//

    நான் எந்த விதத்திலும் க்ரேட் கிடையாது... பட்டா கண்ல பட்டேன்.... என்னை பட்டுப்போக விடாம கொண்டாடுறாங்க..... எல்லா க்ரேட்னெஸும் பட்டாவையே சேரும்.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 29 July 2016 at 07:44

      **!!!!!! க்ரேட் லைக் யூஊஊஊஊ ஒன்லி !!!!!!!!!!**

      //நான் எந்த விதத்திலும் க்ரேட் கிடையாது...//

      ஓஹோ .... என்னே ஒரு கிரேட் தன்னடக்கம் ! சபாஷ் !!

      //பட்டா கண்ல பட்டேன்.... என்னை பட்டுப்போக விடாம கொண்டாடுறாங்க..... எல்லா க்ரேட்னெஸும் பட்டாவையே சேரும்.......//

      பட்டுப்போன்றவர் கண்ல பட்டு, அவர் தங்களைப் பட்டுப்போக விடாம கொண்டாடுவது கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      தமிழ் வார்த்தை விளையாட்டுக்களிலும் நீங்க கிரேட்டோ கிரேட் தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. :) மிக்க நன்றீங்கோ.

      Delete