Thursday 28 July 2016

idhayathai etho ontru

8 comments:

  1. ரொம்ப இனிமையான பாடல்.....

    ReplyDelete
  2. வாங்க சாரூஜி.. இது கொஞ்சம் புது பாட்டுதான்....ஆனாலும் வார்த்தைகள் புரியும்படி மியுஸிக் இருக்கு
    ..

    ReplyDelete
  3. இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪
    ♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪

    ♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪
    ♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪

    ♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪
    ♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪

    ♪ இது ஒரு கனவு நிலை ♪
    ♪ கலைத்திட விரும்ப வில்லை ♪

    ♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪
    ♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪

    ♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪
    ♪ இனி நீயும் நானும் ஒன்று ♪

    ♪ என சொல்லும் நாளும் இன்று ♪
    ♪ எனக்கென்ன வேண்டும் என்று ♪

    ♪ ஒரு வார்த்தை கேளு நின்று ♪
    ♪ இனி நீயும் நானும் ஒன்று ♪

    ♪ என சொல்லும் நாளும் இன்று ♪

    ♪ மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து ♪
    ♪ மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன் ♪

    ♪ தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று ♪
    ♪ நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன் ♪

    ♪ அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம் ♪
    ♪ ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம் ♪

    ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
    ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪

    ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
    ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪

    ♪ இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று ♪
    ♪ இதுவரை இதுபோலே நானும் இல்லையே ♪

    ♪ கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று ♪
    ♪ முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே ♪

    ♪ இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது ♪
    ♪ என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே ♪

    ♪ இது ஒரு கனவு நிலை ♪
    ♪ கரைத்திட விரும்ப வில்லை ♪

    ♪ கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே ♪

    ♪ ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ ♪
    ♪ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல ♪

    ReplyDelete
  4. படம்: என்னை அறிந்தால்

    இசை: ஹாரிஸ் ஜயராஜ்

    பாடலாசிரியர் : தாமரை

    பாடியவர்: சின்மயி

    ஆண்டு: 2015

    ReplyDelete
  5. பாடல் வித்யாசமாகவும் இனிமையாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. ரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ரொம்ப பிடிச்சிருக்கு. பாடல் வரிகள் புரிய ஈசியா இருக்கு...//

      :) மிக்க நன்றி.

      உனக்காக .... எல்லாம் உனக்காக ....
      இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக .....

      Delete