Wednesday 11 May 2016

நலம்தானா

10 comments:

  1. நலம்.... நலம் அறிய.... ஆவல்......
    ஏதுக்கு... இம்பூட்டு ஓவரா மேக்கப்பு போட்டுபிட்டாக......

    ReplyDelete
  2. எல்லாரும்... நலம்தானா........ ரெண்டு நாளா இந்த பக்கமே வரமுடியல.... அவ்ளோவ் பிஸி....இப்ப சீக்கிரமே வந்துவிட்டேன்..... நேசித்து நம்ம முன்னா பார்க் ஃப்ரெண்ட் சாரூ.... கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்... கிருஷ்.... என்னை இப்ப போகவேண்டாம்... நிலமை சரி இல்லை.. அப்புறமாக எப்பவாவது போடலாம்னு ஸ்ட்ராங்கா சொல்லி இருந்தாங்க..... ஆனா அவங்க பேசச் மீறிட்டு... போனேன்... அவங்க என்மேல ரொம்ப கோபமாக இருப்பாங்கனு பயம்மா இருக்கு..... அவங்களுக்கு கூட மெயில் பண்ணல... இங்குதான் சொல்லுகிறேன்...சாரூ... பர்ஸனலா மெயிலில் கூப்பிட்டா.... தவிர்க்க முடியல... கிருஷ்...... ஸாரிப்பா....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 May 2016 at 21:32

      //எல்லாரும்... நலம்தானா........//

      வாம்மா ’என் ராஜாத்தி’! எல்லோரும் நலமே !!

      //ரெண்டு நாளா இந்த பக்கமே வரமுடியல.... அவ்ளோவ் பிஸி....//

      நீங்க பிஸியோ பிஸி என நாங்களும் எங்களுக்குள் புரிந்துகொண்டோம்.

      //இப்ப சீக்கிரமே வந்துவிட்டேன்.....//

      மிக்க மகிழ்ச்சி. :) முருகு பாஷையில் ’வெரசா’ வருவீங்களோ, மாட்டீங்களோன்னு ஒரே கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக வெரசாவே வந்துட்டீங்கோ. அதற்கு என் நன்றிகள்.

      //நேசித்து ..... நம்ம முன்னா பார்க் ஃப்ரெண்ட் சாரூ.... கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்...//

      ஆஹா, இதைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் சிலரை மட்டுமே இது போல நேசித்து நேரில் பார்க்கச் செல்கிறீர்கள்.

      //கிருஷ்.... என்னை இப்ப போகவேண்டாம்... நிலைமை சரி இல்லை.. அப்புறமாக எப்பவாவது போகலாம்னு ஸ்ட்ராங்கா சொல்லி இருந்தாங்க.....//

      நீங்கள் என்னை கன்ஸல்ட் செய்ததால், அந்த சமயம் என் மனதில் எனக்குத் தோன்றியதை மட்டுமே சொன்னேன். பிறகு ஏன் அப்படி நாம் சொன்னோம் என மிகவும் ஃபீல் செய்தேன்.

      //ஆனா அவங்க பேச்ச மீறிட்டு... போனேன்...//

      அதனால் என்ன தப்பு? புருஷன்-பொஞ்சாதியே ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்காமல் மீறிட்டுப் போகும் காலமாக உள்ளது. இதில் என் பேச்சை தாங்கள் மீறிட்டுப் போனதாகச் சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதெல்லாம் அவரவர்கள் விருப்பம் + செளகர்யம் மட்டுமே.

      பிறகுதான் உடனே, தங்களுக்கு இதில் விருப்பமாகவும், செளகர்யமாகவும் இருந்தால் ஜாக்கிரதையாகப் போய்விட்டு ஜாக்கிரதையாகத் திரும்பி வாங்கோ எனச் சொல்லி நான் எழுதியிருந்தேனே.

      //அவங்க என்மேல ரொம்ப கோபமாக இருப்பாங்கனு பயம்மா இருக்கு.....//

      சேச்சே, உங்களைப்போய் நான், அதுவும் இந்த ஒரு நல்ல கல்யாண விஷயத்தில்போய் கோபித்துக்கொள்வேனா என்ன?

      //அவங்களுக்கு கூட மெயில் பண்ணல...//

      என்னவோ தினமும் எனக்கு அடிக்கடி மெயில் அனுப்பி தட்டுக்கிட்டுப் போறாப்போல இது ஒரு வார்த்தை .... நடுவில் இங்கே. :(

      //இங்குதான் சொல்லுகிறேன்...//

      நல்லவேளை ... இங்காவது சொன்னீங்களே. நல்லதுதான்.

      //சாரூ... பர்ஸனலா மெயிலில் கூப்பிட்டா....//

      அப்படியா? அது எனக்குத் தெரியவே தெரியாதூஊஊஊ. ஒருவேளை என்னையும் முன்னாவையும், முருகுவையும் மட்டும்தான் மெயிலில் கூப்பிட்டாங்களோ என நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் போலிருக்கு.

      //தவிர்க்க முடியல... கிருஷ்...... ஸாரிப்பா....//

      முன்னா பார்க் நண்பர்கள் சார்பில் நீங்களாவது போய் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி மட்டுமே.

      நீங்கள் போவது மட்டும் எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் ப்ளேன் பிடித்து ஓடியாந்திருப்பேன்.

      ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக உங்கள் இருவரையும் தரிஸிக்கும் வாய்ப்பாக அது எனக்கு அமைந்திருக்கும்.

      ஏதோ ப்ராப்தம் இல்லாமல் போய்விட்டது. அது ஒன்றே எனக்கும் வருத்தம். இதில் ஸாரியெல்லாம் எதற்கு?

      Delete
  3. நலம் தானா?
    நலம்தானா?
    உடலும் உள்ளமும் நலந்தானா?

    நலம் தானா?
    நலம்தானா?
    உடலும் உள்ளமும் நலந்தானா?

    நலம் தானா?
    நலம்தானா?
    உடலும் உள்ளமும் நலந்தானா?

    நலம்பெற வேண்டும்
    நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

    இலைமறை காய் போல் பொருள் கொண்டு
    எவரும் அறியாமல் சொல் இன்று.

    நலம் தானா?
    நலம்தானா?
    உடலும் உள்ளமும் நலந்தானா?

    கண் பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ அதை நானறியேன்

    என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ அதை நானறியேன்.

    புண்பட்ட சேதியை கேட்டவுடன்
    இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

    நலம் தானா?
    நலம்தானா?
    உடலும் உள்ளமும் நலந்தானா?

    நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
    நடப்பதையே நினைத்திருப்போம்

    கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
    காலம் மாறும் சந்திப்போம்.

    ReplyDelete
  4. நல்ல கருத்துள்ள பாடல், அருமையான நடனம். வெரி குட் சிச்சுவேஷன் ஸாங்க் :)

    பகிர்வுக்கு நன்றிகள் முன்னா.

    ReplyDelete
  5. தன் தாயான குண்டு வடிவு (C.K.சரஸ்வதி) அவர்களின் (காதலுக்கான) பலவிதக் கட்டுப்பாட்டுளுக்கு இடையேயும், நாட்டியப்பேரொளியான எங்கட பத்மினியின் சர்வாங்கமும் + நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கண்களும் பேசிக்கொள்ளும் அழகே அழகு ... இந்தக்காட்சியில்.

    நான் மிகவும் விரும்பி பலமுறை பார்த்த படம் இது. இதில் அனைவரின் நடிப்புமே மிக அருமையாக இருக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. கட்டுப்பாட்டுளுக்கு = கட்டுப்பாடுகளுக்கு

      Delete
  6. ஹை..... பூந்தளிர் மேடம்... சாரூஜி... கல்யாணத்துக்கு போயிருந்தீங்களா... அத பத்தி விவரமாக இங்க சொன்னீங்கன்னா நாங்களும் தெரிஞ்சி கிட்டு சந்தோசப்படுவோம்லா.......

    ReplyDelete
  7. ஆமாம்மா போயிருந்தேன்.. ரெஜிஸ்டர் மேரேஜ் வெரி ஸிம்பிலா நடந்தது.. பிறகு கோவில் ....ஹோட்டல்... சாரூவின் புகுந்தவீடு (பங்களாதான்).... எல்லாம் பாத்துட்டு என் வீடு வரும்போது இரவு8-- மணி.. காலை 5--மணிக்கு கிளம்பி போனேன்.... செம டயர்டு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 May 2016 at 21:46

      //ஆமாம்மா போயிருந்தேன்.. ரெஜிஸ்டர் மேரேஜ் வெரி ஸிம்பிலா நடந்தது.. பிறகு கோவில் ....ஹோட்டல்... சாரூவின் புகுந்தவீடு (பங்களாதான்).... எல்லாம் பாத்துட்டு என் வீடு வரும்போது இரவு8-- மணி.. காலை 5--மணிக்கு கிளம்பி போனேன்....//

      அச்சா, பஹூத் அச்சா ! கொடுத்துவெச்ச மஹராஜிகள் .... இருவருமே :)

      //செம டயர்டு...//

      ஓஹோ ! நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.

      ooooooo

      ’தனிமையிலே இனிமைகாண முடியுமா’ன்னு ஒரு அருமையான பாடல் உள்ளது. அதனை என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு முன்னாக்குட்டியைக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete