Tuesday 13 September 2016

நான் பொல்லாதவன்


11 comments:

  1. என்ன கம்பீரமான பாட்டு. நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
    நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்

    என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
    வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
    என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

    வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
    கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
    ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

    வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
    வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
    ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி

    நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றே தான் வாழ்ந்தேனடி

    நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

    நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
    என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்

    வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
    கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
    ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

    நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி

    ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி

    எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி

    இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி

    நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
    என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
    வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

    கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
    ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

    ReplyDelete
  4. படம் : பொல்லாதவன் (1980)

    இசை : எம். எஸ். விஸ்வநாதன்

    பாடியவர் : பாலசுப்ரமணியம்

    வரிகள் : கண்ணதாசன்

    ReplyDelete
  5. இதிலுள்ள பாடல் வரிகளும் அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

    ReplyDelete
  6. ஓர் எச்சரிக்கை :)
    ==================

    தாங்கள் மிகுந்த ஆவலுடன்
    எதிர்பாக்கும் ........

    ’மீனா’ என்று என்னால்
    அன்புடன் அழைக்கப்படும்

    ’முன்னா மெஹர் மாமியின்
    மும்பைப் பயண அனுபவம்’

    பற்றிய தொடர்
    இன்று முதலேகூட இந்தத் தளத்தின்
    பின்னூட்டப் பகுதிகளிலே
    என்னால் வெளியிடப்படலாம்

    காணத்தவறாதீர்கள் !

    கருத்தளிக்க மறவாதீர்கள் !!

    ReplyDelete
  7. இன்னக்கி எதுவுமே வல்லியே கோபால்ஜி

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 15 September 2016 at 05:43

      //இன்னக்கி எதுவுமே வல்லியே கோபால்ஜி//

      என் ஸ்பீடுக்கு உங்க முன்னா ஒத்துழைப்பதே இல்லை.

      அவளை நம்பி நான் மேலே எழுதியுள்ளது தப்புதான். நான் மாங்கு மாங்குன்னு எழுதி அனுப்பியும் அவள் வெளியிடவே இல்லையே.

      மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விட்டது என் நிலைமை. நான் என்ன செய்ய?

      Delete
    2. என்ன கோபூஜி... இப்படி சொல்லிட்டிங்க... நெட் சொதப்புனா நா என்ன பண்ண......

      Delete
  8. காத்துண்டே இருக்கேன் பெரிப்பா

    ReplyDelete
    Replies
    1. happy 15 September 2016 at 05:51

      //காத்துண்டே இருக்கேன் பெரிப்பா//

      மிக்க நன்றிடா .... செல்லம்.

      என் செல்லக்குழந்தையாகிய உன் நன்மைக்காக நான் எந்த உதவியும் செய்யத் தயாராகக் காத்திருக்கிறேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் எனக்குப் புரியாமலேயே உள்ளது.

      நானும் உன் பதிலுக்காகக் காத்துண்டே இருக்கேனாக்கும்.

      Delete