Thursday 15 September 2016

காதல் ரொஜாவே.


35 comments:

  1. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
    ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
    பகுதி-2

    பகுதி-1 க்கான இணைப்பு:

    http://htpsipikulmuthu.blogspot.in/2016

    >>>>>

    ReplyDelete
  2. (5)

    வரும் 26.09.2016 திங்கட்கிழமை நடைபெற உள்ள, முன்னாவின் அக்காவின் நிக்காஹ் பத்திரிகையை (அழைப்பிதழை) மும்பை மஹாலக்ஷ்மி கோயில் பகுதிக்கு அருகே அமைந்துள்ள ’ஹாஜி அலி தர்ஹா’ வில் சமர்ப்பித்து, நல்லபடியாக நிக்காஹ் நடக்க வேண்டும் எனத் தொழுகைகள் (பிரார்த்தனைகள்) செய்துவிட்டு, அதற்கான காணிக்கைகள் செலுத்திவிட்டு வர வேண்டும் என்பதே இவர்களின் இந்த திடீர்ப் பயணத்தின் முக்கியக்குறிக்கோள் ஆகும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எஸ்... கோபூஜி... இதயெல்லாம் உங்க எழுத்தல படிக்கயிலே மறுபடி மும்பைக்கே போயிட்டேன்...

      Delete
    2. ஓ....நால்லாம் கல்யாண பத்திரிகையை குலதெய்வம் கோவிலுக்கு முதலில் வைப்போமே அப்படியா... நல்ல விஷயம்தான்..

      Delete
    3. happy 23 September 2016 at 21:52

      //ஓ....நாமெல்லாம் கல்யாண பத்திரிகையை குலதெய்வம் கோவிலுக்கு முதலில் வைப்போமே அப்படியா... நல்ல விஷயம்தான்..//

      அதே, அதே .... மிகச்சரியாகப் புரிந்துகொண்டு சொல்லி இருக்கிறாய்.

      குலதெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வம், பிறகு ஆச்சார்யாள் (குரு) முதலியவர்களை வணங்கி, புஷ்பம் பழங்களுடனும், அவர்களுக்கான காணிக்கைகளுடனும் பத்திரிகைகளை சமர்ப்பித்துவிட்டு, பிறகுதான் மற்ற எல்லோருக்கும் விநியோகம் செய்யணும்.

      மேலும் சுமங்கலி ப்ரார்த்தனை செய்ய சங்கல்பித்து, மஞ்சள் துணியில், மடி ஆச்சாரமாகப் பணத்தை எசஞ்சு முடிஞ்சு ஆத்து ஸ்வாமியிடம் வைத்துவிடணும்.

      Delete
  3. (6)

    முன்னா குடும்பத்தினர் இதற்கு முன்னே பின்னே மும்பைக்குச் சென்றது இல்லை. புறப்பட்டுச்சென்ற அவர்கள் நால்வருக்குமே ஹிந்தி பாஷையும் சுத்தமாகத் தெரியவே தெரியாது.

    இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது? அங்கு மும்பையில் உள்ள ‘ஹாஜி அலி தர்ஹா’வுக்குப் போக எந்த இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி எப்படிச் செல்ல வேண்டும்; அதாவது நடந்தேவா, பஸ்ஸிலா, லோக்கல் எலெக்ட்ரிக் ட்ரெயினாலா, ஆட்டோவிலா, டாக்ஸியிலா என்ற பல சந்தேகங்களை யாரிடம் கேட்பது? யாரும் நம்மை ஏமாற்றாமலும், நாமும் பிறரிடம் ஏமாறாமலும் இருக்க வழித்தடங்களை அழகாகச் சொல்லிப் யார் நமக்குப் புரிய வைப்பார்கள் என நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தபோது, இதே வலைத்தளத்தில் அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டமிடும் நம் ‘ப்ராப்தம் சாரூஜி’ மும்பையில்தான் எங்கோ இருக்கிறாள் என்ற நினைவு வந்த முன்னா, என்னிடம் சாரூஜியின் மெயில் ஐ.டி. தர முடியுமா கோபால்ஜி எனக் கேட்டிருந்தாள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபூஜி.... நீங்க அவங்க ஐ.டி. கொடுத்து உதவினதாலதான எங்களால அவங்கள காண்டாக்ட் பண்ணி அவங்க வீட்ல ஜாலியா ரெண்டு நாட்கள் இருக்க முடிந்சது. என்னா ராயல் ட்ரீட் கொடுத்து கவனிச்சாங்க.. உங்களுக்கு முதல் நன்றிகள்.. கோபூஜி...

      Delete
    2. ஆமா முன்னா.. கோபால்ஜியால தான் நம்ம நட்பு ஸ்ட்ராங்கா ஆகியிருக்கு.. அவங்க இல்லனா நாமளும் இல்லதான்

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 16 September 2016 at 21:12

      //கோபூஜி.... நீங்க அவங்க ஐ.டி. கொடுத்து உதவினதாலதான எங்களால அவங்கள காண்டாக்ட் பண்ணி அவங்க வீட்ல ஜாலியா ரெண்டு நாட்கள் இருக்க முடிந்சது. என்னா ராயல் ட்ரீட் கொடுத்து கவனிச்சாங்க.. உங்களுக்கு முதல் நன்றிகள்.. கோபூஜி...//

      பொதுவாக நான் யாருக்கும் யாரைப்பற்றிய எந்தத் தகவல்களும் கொடுப்பது இல்லை. இதை இன்றுவரை நான் என் கொள்கையாகவே வைத்துக்கொண்டுள்ளேன்.

      நீயும் என்னிடம் என்ன விஷயம் ஏது விஷயம் எனச் சொல்லாமலேயே, சாரூவின் இ.மெயில் ஐ.டி. எனக்குத்தர முடியுமா கோபால்ஜி என்றுதான் அன்றொருநாள் கேட்டிருந்தாய்.

      ஒருவேளை உன் அக்கா கல்யாணத்திற்கு அவர்களுக்கு மெயில் மூலம் அழைப்பிதழ் அனுப்பத்தான் கேட்கிறாயோ என நினைத்துத்தான் நான், நீ கேட்டவுடன் மறுக்காமலும், தாமதிக்காமலும், சாரூஜியிடம் பெர்மிஷன் கேட்காமலும், அவர்களின் மெயில் ஐ.டி.யை அனுப்பிக் கொடுத்துவிட்டேன்.

      எப்படியோ இதில் யாரும் என்னை மிஸ்டேக் செய்துகொள்ளாமல், எல்லாம் நல்லபடியாக நடந்தது கேட்க சந்தோஷமே.

      Delete
    4. ப்ராப்தம் 17 September 2016 at 05:47

      //ஆமா முன்னா.. கோபால்ஜியால தான் நம்ம நட்பு ஸ்ட்ராங்கா ஆகியிருக்கு..//

      நட்பு எதுவும் ’ராங்கா’ ஆகாமல் ’ஸ்ட்ராங்கா’ ஆகியிருக்குன்னு சொல்றீங்க. இது ஒருவேளை உண்மையான வார்த்தைகளாயின் எனக்கும் மகிழ்ச்சியே.

      //அவங்க இல்லனா நாமளும் இல்லதான்//

      அடடா, அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, சாரூ.

      இப்படியெல்லாம் ஓவராகச் சொன்னவங்க எல்லாம் இப்போது எங்கோ காணாமலேயே போய் விட்டார்கள். அதற்காக என்னால் தினமும் மனதுக்குள் அழ மட்டுமே முடிகிறது.

      நீ ஒருத்தியாவது என் புதிய செல்லக்குழந்தை ஹாப்பி போல, என்னை விட்டு எங்கும் காணாமல் போகாமல், என் கண் பார்வையிலேயே எப்போதும் பின்னூட்டமிட்டுக்கொண்டு இரு. அதுவே எனக்குப்போதும்.

      வேறு எதுவும் நான் யாரிடமும், எப்போதும் எதிர்பார்ப்பவன் இல்லை. என் ரோல் மாடலான ‘வியட்நாம் வீடு’ பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் பரம்பரையாக்கும் ..... நான் :)

      முடிந்தால் என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளைப் பிறருக்குச் செய்ய நினைப்பேன். ஒருசிலருக்கு, அவர்களின் பிரத்யேகப் பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனைகள் சொல்வதும் உண்டு. அவர்களின் நன்மைக்காக பிராத்தித்துக்கொள்வதும் உண்டு. அத்தோடு சரி. இவையும் என் வயதான காலத்தில் போகும்வழிக்கு ஓர் புண்ணியமாக இருக்கட்டுமே என்று மட்டுமே.

      Delete
    5. நான் உங்கள விட்டு போகவே மாட்டேன் பெரிப்பா...

      Delete
    6. happy 23 September 2016 at 21:53

      //நான் உங்கள விட்டு போகவே மாட்டேன் பெரிப்பா...//

      மிகவும் சந்தோஷம்-டா செல்லம்.

      உனக்கு என்னால் ஆன எவ்வளவோ உதவிகள் செய்யணும் என்று மிகவும் என் மனதில் ஆசைப்படுகிறேன்.

      ஆனால் அவற்றை எப்படி எவ்வாறு செய்வது என்றுதான் தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.

      இதற்கு ஏதேனும் வழி, உனக்குத் தெரிந்தால் எனக்கும் உடனே தெரிவிக்கவும்.

      Delete
  4. (7)

    இவர்களின் பயணத்தின் எந்த விபரமும் தெரியாத நான், ஏதோ தன் அக்காவின் நிக்காஹ் பத்திரிகையை சாரூஜிக்கு மெயில் மூலம் அனுப்பத்தான் கேட்கிறாள் போலிருக்கு என மிகச் சாதாரணமாக நினைத்து, எங்கட சாரூஜியின் அனுமதியைக் கேட்காமலேயே, சாரூஜியின் மெயில் ஐ.டி.யை முன்னாவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதன் பிறகு அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டுள்ளனர்.

    அவர்களுக்குள் என்னதான் பேசினார்களோ, ஏதுதான் பேசினார்களோ எனக்குத் தெரியாது. பிறகு இருவரும் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியே விஷயங்களைத் தாராளமாகப் பகிர்ந்துகொண்டார்கள் என்பது தனி விஷயம்.

    இங்குதான் மிகப்பெரியதோர் MIRACLE எங்கட அன்புக்குரிய சாரூஜி அவர்களின் மிகப்பெரும் முயற்சியால் + பெருந்தன்மையினால் நடந்துள்ளது.

    அது நம் முன்னா குடும்பத்தாரின் ஓர் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கோபூஜி... பாஷை தெரியாத ஊருல யாரையும் நம்பி ஏமாந்துடக்கூடாதேன்னு ரொம்ப கவலையில்தான் இருந்தோம்..

      Delete
    2. அப்படி என்ன மிரகிள் நடந்திச்சி கோபால்ஜி.. என்னென்னமோ சொல்றீங்க...

      Delete
    3. ப்ராப்தம் 17 September 2016 at 05:48

      //அப்படி என்ன மிரகிள் நடந்திச்சி கோபால்ஜி.. என்னென்னமோ சொல்றீங்க...//

      மொத்தம் 80 பகுதிகளாக பிரித்து நான் வெளியிட நினைத்துக்கொண்டிருக்கும் இந்தத்தொடரில் இதுவரை இங்குள்ள 8 பகுதிகளை மட்டும்தானே படித்துள்ளாய். அதாவது ஜஸ்ட் 10% மட்டுமே.

      கடைசிவரை 100% படித்தால் மட்டுமே MIRACLE நடந்துள்ளதா இல்லையா எனத்தெரியவரும்.

      அதுவும் MIRACLE தானா என்பதை நானோ, நீயோ இல்லாமல் வேறு மூன்றாம் நபர் யாராவது சொன்னால்தான் பொருத்தமாகவும் நியாயமாகவும் இருக்கும்.

      இதற்கான மிகச்சரியான பொருத்தமான நீதிபதியாக உன்னை ஏற்கனவே நேரில் சந்தித்துள்ள எங்கட ராஜாத்தி-ரோஜாப்பூ வருகை தந்து கருத்தளிப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      அதற்குப் ’ப்ராப்தம்’ உள்ளதா எனப் பார்ப்போம்.

      Delete
    4. கண்டிப்பா கிருஷ்.. அரைகுறையாக பாதியில் இருந்து படித்து கருத்து சொல்வது சரியா இருக்காது. ஆரம்பத்திலிருந்து வரேன்....

      Delete
    5. பூந்தளிர் 17 September 2016 at 21:14

      //கண்டிப்பா கிருஷ்.. அரைகுறையாக பாதியில் இருந்து படித்து கருத்து சொல்வது சரியா இருக்காது. ஆரம்பத்திலிருந்து வரேன்....//

      ஓக்கே....டா, தேங்க் யூ....டா !

      Delete
    6. ஏற்கனவே இதற்கு பதில் சொல்லி இருந்த நினைவு இருக்கே... முன்னா பப்லிஷ் கொடுக்கலியா... 10% பிரஸென்ட் படிச்சாலே மிரகிள் தான் என்று ஸ்ட்ராங்காக சொல்ல முடியுமே. சாரூ...பட்டா மேட் ஃபார் ஈர் அதர்தான். விருந்தினரை சூப்பரா கவனிச்சிருக்காங்க..

      Delete
    7. பூந்தளிர் 20 September 2016 at 22:20

      //ஏற்கனவே இதற்கு பதில் சொல்லி இருந்த நினைவு இருக்கே... முன்னா பப்லிஷ் கொடுக்கலியா...//

      அதெல்லாம் உடனுக்குடன் பப்ளிஷ் ஆகாது. அவள் ஒரு உலக மஹாச் சோம்பேறி என்றுதான் நானும் பலமுறை சொல்லியிருக்கேனே.

      //10% படிச்சாலே மிரகிள் தான் என்று ஸ்ட்ராங்காக சொல்ல முடியுமே. சாரூ...பட்டா மேட் ஃபார் ஈச் அதர்தான். விருந்தினரை சூப்பரா கவனிச்சிருக்காங்க..//

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். அனுபவம் பேசுகிறது.

      உங்களைப்போல யாராவது சொன்னால் மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

      Delete
    8. பூந்தளிர் மேடம்... சாரூஜிஎல்லாம் உங்க கூட நிறய வருஷமா பழக்கமாகி இருக்காங்க நான் இப்பதான் வந்திருக்கேன்.. ஆனா கூட கோபு பெரிப்பா கூட பலநாளா பழகிட்டமாதிரி ஒரு அன்னியோன்னியமாதான் தோணறது..

      Delete
    9. happy 23 September 2016 at 21:57

      //பூந்தளிர் மேடம்... சாரூஜி எல்லாம் உங்க கூட நிறய வருஷமா பழக்கமாகி இருக்காங்க. நான் இப்பதான் வந்திருக்கேன்.. ஆனா கூட கோபு பெரிப்பா கூட பலநாளா பழகிட்டமாதிரி ஒரு அன்னியோன்னியமாதான் தோணறது..//

      உண்மையான ஆத்மார்த்தமான அன்பும், பாசமும், அக்கறையும் ஒருவருக்கொருவர் மனதளவில் இருந்து, ஒருவரின் நலம் விரும்பியாக இன்னொருவர் இருப்பார்களேயானால், அதில் பலநாள் பழகிவிட்ட மாதிரி ஒரு அன்னியோன்யம் ஏற்படத்தான் செய்யும்.

      இவையெல்லாம் ஜென்ம ஜென்மமாக நமக்குள் தொடரும் ஏதேனும் ஓர் உறவாகவும் கூட இருக்கலாம் என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வதும் உண்டு.

      மிகவும் சந்தோஷம்-டா என் செல்லக்குட்டி ‘ஹாப்பி’ :)

      Delete
  5. (8)

    எங்கட சாரூஜி தன்னால் ஸ்டேஷனுக்கு வரமுடியாத சூழ்நிலைகளில் இருந்தும்கூட, தன் அன்புக்கணவரை, அவரின் மிகப்பெரிய சொகுசுக்காரில் மும்பை தாதர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்ததுடன் மட்டும் நில்லாமல் அவர்கள் மும்பையில் செல்ல வேண்டிய இடத்திற்கும் அழைத்துச்சென்று, அவர்களின் பிரார்த்தனைகளை அவர்களின் கூடவே அவரும் இருந்து நிறைவேற்றிக்கொடுத்து, உணவகம் ஒன்றில் சிற்றுண்டி வாங்கிக்கொடுத்து, அதன்பின் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்துபசாரங்கள் செய்து, இரவு தன் வீட்டிலேயே அனைவரையும் தங்கச் செய்து, திரும்ப அவர்கள் ஊருக்கு இரயிலில் செல்லும் வரை அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்து உதவியுள்ளவள் நம் அன்புக்குரிய சாரூஜி அவர்களும் அவளின் அன்புக்கணவருமே. அதைப்பற்றிய அனைத்து விபரங்களையும் ஒவ்வொன்றாய் நாம் இனி கேட்டு மகிழ்வோம்.

    நல்லவேளையாக முன்னா க்ரூப் விருந்தினராக அங்கு போன நேரம் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறையாகவும், திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்திக்காக கூடுதல் விடுமுறையாகவும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையானதால் பட்டாஜிக்கு ஆபீஸும், ப்யூஷும் பள்ளிக்கூடமும் இல்லாமல் வீட்டில் இவர்களுடன் கூடமாட இருந்து கவனித்து உதவ முடிந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மைதான் மூணூ நாள் சேர்ந்தாப்ல லீவு இருந்ததால பட்டா வால அவங்கள நல்லபடியா கவனிக்க முடிஞ்சது..

      Delete
    2. ப்ராப்தம் 17 September 2016 at 05:49

      //அது என்னமோ உண்மைதான் மூணூ நாள் சேர்ந்தாப்ல லீவு இருந்ததால பட்டா வால அவங்கள நல்லபடியா கவனிக்க முடிஞ்சது..//

      அதுவும் முன்னா க்ரூப் க்கு ஓர் எதிர்பாராத அதிர்ஷ்டமாக Favorable ஆக அமைந்துள்ளது போலிருக்குது.

      Delete
    3. லீவு நாள் இல்லைனா கூட லீவு போட்டுட்டு கவனிப்பாங்கதான்

      Delete
    4. பூந்தளிர் 20 September 2016 at 22:21

      //லீவு நாள் இல்லைனா கூட லீவு போட்டுட்டு கவனிப்பாங்க//

      ஒஹோ, அப்படியா. இது தெரியாமல் போச்சு எனக்கு.

      நீ மிகவும் நல்லாவே அவங்களைப்பற்றி தெரிஞ்சு வெச்சுருக்கிறாய். சபாஷ்...டா ராஜாத்தி.

      Delete
  6. முன்னா இந்த பாட்டு யாருக்காக..... தலைப்பு வழக்கம்போல சொதப்பல்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 15 September 2016 at 05:38

      //முன்னா இந்த பாட்டு யாருக்காக.....//

      oooooooooooooooooooooooooooooooooooooooooooo

      யாருக்காக இது யாருக்காக
      இந்த மாளிகை வசந்த மாளிகை

      காதல் ஓவியம் கலைந்த மாளிகை
      யாருக்காக இது யாருக்காக

      மரணம் என்னும் தூது வந்தது
      அது மங்கை என்னும் வடிவில் வந்தது

      சொர்கமாக நான் நினைத்து
      இன்று நரகமாக மாறிவிட்டது

      யாருக்காக இது யாருக்காக

      இந்த மாளிகை வசந்த மாளிகை
      காதல் ஓவியம் கலைந்த மாளிகை

      யாருக்காக இது யாருக்காக

      கண்கள் தீண்டும் காதல் என்பது
      அது கண்ணில் நீரை வரவழைப்பது

      பெண்கள் காட்டும் அன்பு என்பது
      நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

      எழுதுங்கள் என் கல்லறையில்
      அவள் இரக்கம் இல்லாதவள் என்று

      பாடுங்கள் என் கல்லறையில்
      இவன் பைத்தியக்காரன் என்று

      யாருக்காக இது யாருக்காக

      இந்த மாளிகை வசந்த மாளிகை
      காதல் ஓவியம் கலைந்த மாளிகை

      யாருக்காக இது யாருக்காக

      -oOo-

      பாடல்: யாருக்காக இது யாருக்காக
      பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
      வரிகள்: கண்ணதாசன்
      இசை: எம் எஸ் விஸ்வநாதன்
      திரைப்படம்: வசந்த மாளிகை

      oooooooooooooooooooooooooooooooooooooooooooo

      //தலைப்பு வழக்கம்போல சொதப்பல்//

      தலைப்பூ .... ’காதல் ரோஜாவே’ என்றிருந்தால் நம் ராஜாத்தி ரோஜாப்பூ போல மிகவும் அழகாகத்தான் இருந்திருக்கும்.

      தலையில் பூவோ .... நெற்றியில் பொட்டோ வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லாத இவளுக்கு எங்கே அதெல்லாம் தெரியப்போகிறது?

      ’முன்னா’வை நான் என்னதான் ’மீனா’ என்று ஆக்க ஆசைப்பட்டும் ஒன்றும் பிரயோசனமே இல்லை போலிருக்குது.

      Delete
  7. சோகப் பாட்டா... நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  8. எங்கட காதல் ’ரோஜா’வுக்கு இருக்க வேண்டிய மிக அழகான இரண்டு காம்புகளில் .... ஸாரி .... இரண்டு கொம்புகளில் ஒன்றை தலைப்பினில் ஒடித்துவிட்டுள்ள மீனாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  9. காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்
    கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
    என்னானதோ எதானதோ சொல் சொல்

    காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    தென்றல் என்னை தீண்டினால்
    சேலை தீண்டும் ஞாபகம்

    சின்ன பூக்கள் பார்க்கையில்
    தேகம் பார்த்த ஞாபகம்

    வெள்ளி ஓடை பேசினால்
    சொன்ன வார்த்தை ஞாபகம்

    மேகம் ரெண்டு சேர்கையில்
    மோகம் கொண்ட ஞாபகம்

    வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
    நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

    முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

    காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    வீசுகின்ற தென்றலே,
    வேலையில்லை நின்று போ!

    பேசுகின்ற வெண்ணிலா,
    பெண்மயில்லை ஓய்ந்து போ!

    பூ வளர்த்த தோட்டமே,
    கூந்தலில்லை தீர்ந்து போ!

    பூமி பார்க்கும் வானமே,
    புள்ளியாக தேய்ந்து போ!

    பாவயில்லை பாவை, தேவையென்ன தேவை?
    ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

    முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

    காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே

    ReplyDelete
  10. இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் + என் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.

    இந்தப்படத்தின் கதைச் சுருக்கத்தை ஏற்கனவே ஏதோ ஒரு பதிவினில் நான் சொல்லியிருந்த ஞாபகமும் எனக்கு உள்ளது.

    இன்றைய சூழலுக்கு ஏற்றபடி இந்தப்பாடலை வெளியிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  11. படம் : ரோஜா

    இசை : A.R.ரஹ்மான்

    பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்

    பாடல் வரி : வைரமுத்து

    -=-=-=-=-

    இந்தப்படம் வெளியான முதல்நாள் அன்றே பெங்களூர் தியேட்டர் ஒன்றில் என் குடும்பத்தார் அனைவருடனும் சேர்ந்து பார்த்த மிகவும் அருமையா படம் இது. இடைவேளை வரை மிகவும் ஜாலியாகப் போகும் காதல் படம். அதன்பின் கொஞ்சம் சோகம். இறுதியில் சுபமே.

    ReplyDelete