Tuesday 20 September 2016

puddhi ulla manitharellam

3 comments:

  1. நல்ல அர்த்தமுள்ள பாடல்..

    ReplyDelete
  2. புத்தி உள்ளமனிதரெல்லாம்........ என்ன அர்த்தமுள்ள வார்த்தைகள்...

    ReplyDelete
  3. படம் : அன்னை
    பாடியவர் : சந்திரபாபு

    -=-=-=-=-

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
    மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை

    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
    பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

    கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
    அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

    அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
    அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

    ReplyDelete