Tuesday 13 September 2016

சித்தாடை கட்டிகிட்டு...


8 comments:

  1. ஓல்ட் தமிழ் குத்தாட்டமா.. நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  2. யப்பா.... எவ்ளோ... பழசு பாட்டு... ஆனா கூட ரசிக்க முடியுது...

    ReplyDelete
  3. சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

    சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

    அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்
    அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்

    சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

    முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

    முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

    வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
    வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்

    ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

    குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
    முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
    ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……
    ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………

    குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
    முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்

    அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
    அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்

    அந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம்
    ஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

    அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
    யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
    ஆ…ஆ.ஆ…..ஆ….

    அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
    யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்

    அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்
    அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்

    ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
    ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்

    ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

    முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
    அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
    அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க

    அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
    இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க

    அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க
    அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க

    சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

    முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

    மயிலாக வந்தாளாம்……… முத்தாரம் போட்டானாம்
    மயிலாக வந்தாளாம் …….. முத்தாரம் போட்டானாம்

    ReplyDelete
  4. //முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
    அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
    அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க//

    -oOo-

    ’ப்ராப்தம்’ மட்டும் இருந்தால் அந்த ரெண்டோடு ரெண்டு சேர்ந்து நாலுகூட ஆகும்ங்க !! :))))

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... கோபால்ஜி.....குறும்பு பண்ணாதிங்க ஷை ஆகுதில்ல...

      Delete
    2. ப்ராப்தம் 15 September 2016 at 05:44

      //ஹா..ஹா... கோபால்ஜி.....குறும்பு பண்ணாதிங்க ஷை ஆகுதில்ல...//

      குறும்பு பண்ணினது நானா அல்லது நீங்களும் உங்கள் ஆத்துக்காரருமா ... இதற்குப்போய் ஷை ஆவானேன்?

      ஒன்றுக்கு இரண்டாகக் கொடுப்பதெல்லாம் கடவுளின் விசேஷ ஸ்பெஷல் கிஃப்ட் அல்லவா. எல்லோருக்குமா இதுபோல கிடைக்கும்?

      கொடுத்து வைத்த மகராஜி அல்லவா நீங்கள்.

      சமீபத்தில் ஓர் வாட்ஸ்-அப் படம் எனக்குக் கிடைத்தது. அதில் ஓர் இரட்டையர்கள் (இருவரும் பெண்கள்) மற்றொரு இரட்டையர்களைத் (இருவரும் ஆண்கள்) திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த இரு ஜோடிக்குமே, ஒவ்வொரு ஜோடிக்கும், இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது உலக அதிசயமாகச் சொல்லப்படுகிறது. அந்த 8 பேரின் போட்டோக்களும் என்னிடம் வாட்ஸ்-அப்பில் இன்னும் உள்ளன. உங்களுக்கு அதனை பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன். :)

      மீண்டும் என் இனிய நல்வாழ்த்துகள். தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவும்.

      Delete
  5. படம்: வண்ணக்கிளி

    இசை: கே.வி. மஹாதேவன்

    பாடியோர்: பி. சுசிலா + ஸி. கிருஷ்ணன்

    பாடல் ஆசிரியர்: மருதகாசி

    ReplyDelete
  6. பாடல் வரிகள் அத்தனையும் அழகோ அழகு.

    பகிர்வுக்கு நன்றிகள், மீனாஆஆஆஆஆஆ !!

    ReplyDelete