Tuesday 6 September 2016

அடுத்தாத்து அம்புஜத்த


17 comments:

  1. சுசீலா:
    ஏன்னா, நீங்க சமர்த்தா?
    நீங்க அசடா?
    சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
    அசடா இருந்தா பறிப்பேளாம்

    டி.எம்.எஸ்:
    ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

    சுசீலா:
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
    அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
    அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
    பொடவையா வாங்கிக்கறா
    பட்டு பொடவையா வாங்கிக்கறா
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
    வாங்கறாண்டி..பட்டு
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
    மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
    மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
    சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
    பட்டு புடவைக்கு ஏதடி?
    அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

    சுசீலா:
    உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
    என்னத்தைக் கண்டா பட்டு?
    உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
    கண்டா பட்டு?

    டி.எம்.எஸ்:
    பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு

    சுசீலா:
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
    நட்டுண்டா நேக்கு?
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
    நட்டுண்டா நேக்கு?
    எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
    எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு

    டி.எம்.எஸ்:
    சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
    தெரியாதோடி நோக்கு?
    சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
    தெரியாதோடி நோக்கு?

    சுசீலா:
    எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
    எதுக்கெடுத்தாலும் சாக்கு .... உம் உம்
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

    சுசீலா:
    பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

    டி.எம்.எஸ்:
    ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

    சுசீலா:
    என்னத்தை செய்வேள்?

    டி.எம்.எஸ்:
    சொன்னத்தை செய்வேன்

    சுசீலா:
    வேறென்ன செய்வேள்?

    டி.எம்.எஸ்:
    அடக்கி வெப்பேன் :))))))

    சுசீலா:
    அதுக்கும் மேலே?

    டி.எம்.எஸ்:
    ம்ம்ம் பல்லை உடைப்பேன்

    சுசீலா:
    அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
    அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

    டி.எம்.எஸ்:
    பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
    பட்டு நமக்கேண்டி? பட்டு நமக்கேண்டி?

    -=-=-=-=-=-

    ReplyDelete
  2. எதிர்நீச்சல் கே. பாலசந்தர் இயக்கி 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம்.

    இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    செளகார் ஜானகியும் - ஸ்ரீகாந்தும் நடித்துப் பாடும் இந்தப் பாடல் இன்றும் மிகப் பிரபலமான பாடல்.

    வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாம்மாவும், செளந்தரராஜன் ஐயாவும் பாடும் அழகும், குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்...

    -=-=-=-

    இதனை இன்று என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ள மீனாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    -=-=-=-

    இனி எங்கட ராஜாத்தியின் கமெண்ட்ஸுக்குப் பிறகேதான் என் கமெண்ட்ஸ் உங்களின் பதிவினில் இடம்பெறும்.

    இது மட்டும் ஏதோ ஓர் ஆர்வக்கோளாறினால் அவசரமாக என்னால் எழுதப்பட்டுவிட்டது என்பதை அறியவும். :)

    ReplyDelete
    Replies
    1. நோ....... கிருஷ்....... அவ இவ்வளவு ஆர்வமா உங்களுக்கு பிடிச்ச பாட்டா போட்டு உங்க கமெண்ட் எதிர் பார்க்கறா... உங்க பிடிவாதத்த கொஞ்சம் விட்டுடுங்க. எப்பவும்போல முழு பாடல்... கலக்கல் கமெண்ட் போடுங்க கிருஷ்....

      Delete
  3. இல்ல கோபூஜி.... நீங்க பண்ணுறது சரியே இல்ல... ஒவ்வொரு பாட்டும் போட்டுட்டு உங்கட கமெண்ட் வந்திருக்குதான்னு ஆர்வமா வந்து பாத்துகிடுவேன... ஆனா ஏமாத்தமாதான் இருக்குது. உங்கட மேல ரொம்ப வருத்தம்... கோபம்லா வருது......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து

      //இல்ல கோபூஜி.... நீங்க பண்ணுறது சரியே இல்ல...//

      அச்சச்சோ ! ஏன்? என்ன ஆச்சு?

      //ஒவ்வொரு பாட்டும் போட்டுட்டு உங்கட கமெண்ட் வந்திருக்குதான்னு ஆர்வமா வந்து பாத்துகிடுவேன...//

      இதே போலத்தான் ஒருத்தி ஆர்வமா தன் பதிவுகளின் என் கமெண்ட்ஸ் இருக்கான்னு பார்க்க ஓடோடி வருவாள், அன்று.

      //ஆனா ஏமாத்தமாதான் இருக்குது. உங்கட மேல ரொம்ப வருத்தம்... கோபம்லா வருது......//

      ஏமாற்றம், வருத்தம், கோபம், முட்டல், மோதல் என்று மட்டுமே எங்கள் நட்பு ஆரம்பித்து, பிறகு அதுவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து எங்களை இன்றுவரை மகிழ்வித்து வருகிறது. :)

      மீனாவின் இந்த ஏமாற்றம், வருத்தம், கோபம் முதலியவற்றை நானும் மிகவும் ரஸிக்கிறேனாக்கும். :)

      மீனா .... வாழ்க ! வளர்க !!

      Delete
    2. //மீனாவின் இந்த ஏமாற்றம், வருத்தம், கோபம் முதலியவற்றை நானும் மிகவும் ரஸிக்கிறேனாக்கும். :)//

      வேணும் நல்லா வேணும் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. என் கோவத்த...ஏமாற்றத்த...வருத்தத்த ரசிக்குறீங்களா........

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 9 September 2016 at 00:42

      **மீனாவின் இந்த ஏமாற்றம், வருத்தம், கோபம் முதலியவற்றை நானும் மிகவும் ரஸிக்கிறேனாக்கும். :)**

      //வேணும் நல்லா வேணும் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. என் கோவத்த... ஏமாற்றத்த... வருத்தத்த ரசிக்குறீங்களா........//

      ஸாரி மீனா. உன் இரு கொம்புகளால் நீயும் என்னை முட்ட வராதே, ப்ளீஸ் ..... மீனா.

      நான் விளையாட்டாக இங்கு சொன்னது வேறு .... நீ உன் மனதில் நினைப்பது முற்றிலும் வேறு, என எனக்கு இப்போது புரிகிறது.

      அதை நினைத்து என்னால் இன்னும் வருந்த மட்டுமே முடிகிறது மீனா. நான் என்ன செய்வது? ... சொல்லு.

      உன்னுடைய அது என் பிரார்த்தனைகளுக்கும் அப்பாற்பட்டது என உனக்கே நன்றாகத் தெரியும்தானே. இடியாப்பச் சிக்கல் அல்லவா அது. எனினும் பார்ப்போம்.

      போகப்போக ஏதேனும் நமக்கும் மேலே உள்ள அல்லாவால் / ஆண்டவனால் MIRACLES நடக்கவும் கூடும்.

      அதையெல்லாம் ஒரு கனவாக மறந்து, மனம் தளராமல் எப்போதும்போல ஜாலியாக சந்தோஷமாக இரு மீனா .... ப்ளீஸ். அக்கா கல்யாணம்தான் நெருங்கி விட்டதே ...... அடுத்து உனக்கும் நிக்காஹ் நடக்கணுமே.

      அன்பான அட்வான்ஸ் நல் வாழ்த்துகள், மீனா.

      Delete
  4. அது யாரு ராஜாத்தி..... அவங்க வரபோது வரட்டுமே... நீங்க வாங்கோ பெரிப்பா.......

    ReplyDelete
    Replies
    1. happy 7 September 2016 at 23:05

      //அது யாரு ராஜாத்தி..... அவங்க வரபோது வரட்டுமே... நீங்க வாங்கோ பெரிப்பா.......//

      ஆஹா, என் செல்லக்குழந்தை ஹாப்பி என்னை ஒரேயடியாகக் கவிழ்த்து விடும் போலிருக்கே. :)

      Delete
    2. உங்கள யாராலயாவது கவுத்துட முடியுமா...

      Delete
    3. happy 7 September 2016 at 23:05

      //அது யாரு ராஜாத்தி.....

      என் செல்லக்குழந்தை .... ஹாப்பி,

      உனக்கும் நானும் என்னவளும் பெரியப்பா + பெரியம்மா முறை என்றால் இந்த ராஜாத்தி ... ’சித்தி’ முறையாக்கும்.

      நீ உன் ஆத்துக்காரருடன் அங்கு பாஷை தெரியாத ஊரில், நீ தனிக்குடுத்தனம் செய்ய நேரும்போது, இந்த ’ராஜாத்தி சித்தி’தான் என்னைப்போலவே உன்னிடம் மிகவும் பிரியமாகவும், அன்பாகவும், உன்னை உன் பெற்ற தாயைப்போல பக்கத்து வீட்டிலேயே குடியிருந்து பாசத்துடனும், நேசத்துடனும், பக்குவமாகப் பார்த்துக்கொள்வாளாக்கும்.

      அந்த நல்ல நேரம் வரும் போது, உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் நான் அறிமுகப்படுத்தி வைப்பேனாக்கும்.

      நான் சொல்வது எல்லாமே ஒருநாள் அப்படியே பலித்துவிடும் என்பதை உணர்ந்துகொள்ளுடா .. என் செல்லமே.

      //அவங்க வரபோது வரட்டுமே... நீங்க வாங்கோ பெரிப்பா.......//

      சித்தி இல்லாமல் நான் மட்டும் இங்கு வந்தால் என் மனதுக்கு ‘ஸித்தி’ ஏற்படாது...டா செல்லம்.

      இதற்குமேல் வேறு ஒன்றும் என்னால் இப்போது உனக்குச் சொல்வதற்கு இல்லை....டா. புரிந்துகொள்ளவும். :)

      Delete
    4. பூந்தளிர் 8 September 2016 at 00:22

      //உங்கள யாராலயாவது கவுத்துட முடியுமா...//

      அன்புக்குரிய ராஜாத்தி,

      நீயும் நம் செல்லக்குழந்தை ஹாப்பியும் அண்டை வீட்டுக்காரர்களாக ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

      நம் செல்லக்குழந்தை ஹாப்பியையும், அவளின் மிக அழகான சிரித்த முகத்தையும், கொழுத்த தேகத்தையும், ஒருமுறை போட்டோவிலோ நேரிலோ நீ பார்த்தாலே போதும், நீயும் என்னைப்போலவே அவளிடம் கவிழ்ந்து விடப்போவது சர்வ நிச்சயம். :)))))

      Delete
    5. அச்சச்சோ கோபு பெரிப்பா... கொழுத்த தேகம்னு சொல்லி எல்லாரு முன்னாலயும் என்னை கவுத்துட்டிங்களே........

      Delete
    6. happy 9 September 2016 at 21:54

      //அச்சச்சோ கோபு பெரிப்பா... கொழுத்த தேகம்னு சொல்லி எல்லாரு முன்னாலயும் என்னை கவுத்துட்டிங்களே......//

      கொழுத்த தேகத்தை என்னால் எப்படிக் கவிழ்க்க முடியும்?

      கொழு கொழுன்னு, மொழு மொழுன்னு, கொள்ளைச் சிரிப்புடன் உள்ளக் குழந்தையைத்தான் எல்லோருக்குமே தூக்கிக்கொஞ்சப் பிடிக்கும். அதனால் அப்படிச் சொல்லிட்டேன்.

      ஸாரி ..... கோச்சுக்காதேடா என் செல்லம்.

      வத்தக்காச்சி மாதிரி, ஓமப்பொடி போல, காய்ந்த கருவேப்பிலை போல இருந்தா யாருக்குப் பிடிக்குமோ எனக்குத்தெரியாது .... ஆனால் எனக்குப்பிடிக்காதும்மா. :)

      Delete
  5. இந்த பாட்டு கேட்டதுமே சிரிப்பாணி பொத்துகிச்சு....

    ReplyDelete
  6. ஆமா ஏன்னா.... நீங்க... சமத்தா... இல்ல.... அசடா...... பதில்...ப்ளீஸ்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:24

      //ஆமா ஏன்னா.... நீங்க... சமத்தா... இல்ல.... அசடா...... பதில்...ப்ளீஸ்.....//

      அதை நீங்க உங்க ஆத்துக்காரரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் இப்படி ஓபனா இங்கு கேட்டால் என்னால் என்ன பதில் சொல்லமுடியும்?

      இந்தப்பாட்டில் மடிசார் புடவை கட்டிய எங்கட செளகார்ஜானகி அப்படித்தானே தன் ஆத்துக்காரரிடம் கேட்கிறாள்.

      பாடி, ஆடி, அழுது புலம்பி கடைசியில் அவரின் சம்பளப்பணம் முழுவதையும் ஆட்டை போட்டு விடுகிறாள் பார்த்தேளா? :)

      மிகவும் சாமர்த்தியசாலி அந்தப் பட்டுமாமி. :)

      Delete