Wednesday 6 April 2016

raajaraajasozan naan

5 comments:

  1. நல்ல கிளுகிளுப்பான பாடல்தான்.

    இருவரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் ஏதேனும் கொடுத்துக்கொண்டே உள்ளார்களே ! சபாஷ் !!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படம் : ரெட்டைவால் குருவி (1987)
    இசை : இளையராஜா
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    பாடல் வரி : வாலி

    oooooooooooooooooooooooooooo


    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே

    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
    கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
    செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே

    கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
    முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
    என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
    தேனோடை ஓரமே நீராடும் நேரமே
    புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
    பூவே காதல் தீவே...

    ReplyDelete
  3. இது பாட்டு நல்லாருக்குது.....

    ReplyDelete
  4. எங்கேருந்து முழு பாட்டும் தேடி பிடிச்சு போடுறீங்க????? பாட்டு நல்லா இருக்கு.......

    ReplyDelete
  5. இங்க வந்தாலே நல்ல பாட்டுக்கள் கேட்க கிடைக்குது.... அதுமட்டுமில்ல பின்னூட்ட கலகலப்பையும் ரசிக்க முடிகிறது.....

    ReplyDelete