இந்த பாட்டுல வர வார்த்தைகள் மனசத்தொடுது.. பாட்டை எழுதியவர் எப்படி எல்லாம் யோசித்து பொறுத்தமான வார்த்தைகளை போட்டிருக்காங்க... க்ரேட்..... எந்த மனிதர் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்.............. பாடியவர் குரலும் .. மியூஸிக்கும்கூட ஸாஃப்டா கேக்க நல்லா இருக்கு.....
Song: ovvoru pookkaLumE solkiRadhE -
ReplyDeleteபாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
Movie: Autograph -
திரைப்படம்: ஆட்டோகிராஃப்
Singers: K.S. Chithra -
பாடியவர்: கே.எஸ். சித்ரா
Lyrics: Pa. Vijay -
இயற்றியவர்: ப. விஜய்
Music: Bharatwaj -
இசை: பரத்வாஜ்
ஆண்டு: 2004
>>>>>
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
ReplyDeleteவாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி யின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ooooooooo
அருமையான இனிமையான பாடல். தன்னம்பிக்கை தரக்கூடியது.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஆமா கோபூஜி... எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு...
ReplyDeleteஇந்த பாட்டுல வர வார்த்தைகள் மனசத்தொடுது.. பாட்டை எழுதியவர் எப்படி எல்லாம் யோசித்து பொறுத்தமான வார்த்தைகளை போட்டிருக்காங்க... க்ரேட்..... எந்த மனிதர் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்.............. பாடியவர் குரலும் .. மியூஸிக்கும்கூட ஸாஃப்டா கேக்க நல்லா இருக்கு.....
ReplyDeleteஇது ரொம்ப நல்ல பாட்டு...ரொம்ப புடிச்சு போச்சி.....
ReplyDeleteஹையோ, இந்தப்பாட்டும் ம்யூசிக்கும் பாடுபவர் குரலும் வார்த்தைகளும் எல்லாமே சூப்பரா இருக்கு..ஃபுல் பாட்டும் படிச்சிகிட்டே பாட்டு கேக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteபூந்தளிர்22 April 2016 at 05:00
Deleteஹையோ, இந்தப்பாட்டும் ம்யூசிக்கும் பாடுபவர் குரலும் வார்த்தைகளும் எல்லாமே சூப்பரா இருக்கு..ஃபுல் பாட்டும் படிச்சிகிட்டே பாட்டு கேக்கும்போது ரொம்ப நல்லா இருக்கு.//
தாங்க் யூ ..... டா :)))))