Tuesday 23 August 2016

கண்ணன் ஒரு


11 comments:

  1. கோபூஜி நேயர் விருப்ப பாடல். கோபூஜி பாட்டு கேட்டு வழக்கமான கலகலப்புடன் கமெண்ட் போட்டாகணும்.. திஸ் இஸ் மீனாஸ் ஆர்டர்.....

    ReplyDelete
    Replies
    1. என் நேயர் விருப்பமாக இந்தப்பாடலை இன்று வெளியிட்டுள்ள எங்கட மீனாக்குட்டிக்கு என் நன்றிகள்.

      பல்வேறு சூழல்களால் என் வீடே கடந்த ஒரு மாதமாகக் கலகலப்பாகத்தான் உள்ளது. எதற்குமே நேரம் கிடைப்பது இல்லை.

      எனினும் மஹாராணியார் மீனா அவர்களின் இந்த ஆர்டரை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

      Delete
  2. இந்த பாட்டு நன்னாருக்கு.

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குது

    ReplyDelete
  4. முன்னா நீ என்ன ஆர்டர் போட்டாலும் அசைஞ்சு கொடுக்கவே மாட்டேங்குறாங்களே....

    ReplyDelete
    Replies
    1. ’ஆடுவோர் ஆடினால் பாடத் தோன்றும் .......’

      உங்கள் அன்புக்காக மட்டுமே ‘கிருஷ்’ இப்போது இங்கு ஓடோடி வந்துள்ளானாக்கும்.

      Delete
    2. கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      கையிரண்டில் நான் எடுத்து
      பாடுகின்றேன் ஆராரோ

      மைவிழியே தாலேலோ
      மாதவனே தாலேலோ

      கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      உன் மடியில் நான் உறங்க
      கண்ணிரண்டும் தான் மயங்க

      என்ன தவம் செய்தேனோ
      என்னவென்று சொல்வேனோ

      உன் மடியில் நான் உறங்க
      கண்ணிரண்டும் தான் மயங்க

      என்ன தவம் செய்தேனோ
      என்னவென்று சொல்வேனோ

      ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
      சொந்தம் இந்த சொந்தமம்மா

      வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
      தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

      அன்னமிடும் கைகளிலே
      ஆடிவரும் பிள்ளையிது

      உன் அருகில் நானிருந்தால்
      ஆனந்தத்தின் எல்லையது

      காயத்ரி மந்திரத்தை
      உச்சரிக்கும் பக்தனம்மா

      கேட்கும் வரம் கிடைக்கும்வரை
      கண்ணுறக்கம் மறந்ததம்மா

      கண்ணன் ஒரு கைக்குழந்தை
      கண்கள் சொல்லும் பூங்கவிதை

      கன்னம் சிந்தும் தேன் அமுதை
      கொண்டு செல்லும் என் மனதை

      கையிரண்டில் நான் எடுத்து
      பாடுகின்றேன் ஆராரோ

      மைவிழியே தாலேலோ
      மாதவனே தாலேலோ

      ஆராரிரோ .. ஆராரிரோ .. ஆராரிரோ .. ஆராரிரோ

      -=-=-=-=-=-=-=-

      Delete
  5. முன்னா கழ்டப்பட்டு அவங்க கோபூஜிக்காக தேடி பிடிச்சு பாட்டு போடறா அவளுக்காக வாங்க...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //முன்னா க-ஷ்-ட-ப்பட்டு அவங்க கோபூஜிக்காக தேடி பிடிச்சு பாட்டு போடறா அவளுக்காக வாங்க...//

      நோ ..... நோ ..... அதெல்லாம் முடியாது. எனக்கு எங்கட ராஜாத்திக்குப்பிறகு தான் இந்த உலகில் மற்ற எல்லோருமே. அதைத் தெரிஞ்சுக்கோங்கோ, முதலில்.

      Delete
  6. இல்ல கிருஷ்..... பிடிவாதம் பிடிக்காதிங்க. மத்தவங்க ஃபீலிங்க்ஸுக்கும் மதிப்பு கொடுங்க.. நான் வந்தாதான் நீங்க வரணும்னு நான் எப்பவாவது சொல்லியிருகுகேனா. எப்பவும்போல நீங்க டெம்லி வந்து கமெண்டு போடுங்க....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:00

      //இல்ல கிருஷ்..... பிடிவாதம் பிடிக்காதிங்க. மத்தவங்க ஃபீலிங்க்ஸுக்கும் மதிப்பு கொடுங்க.. நான் வந்தாதான் நீங்க வரணும்னு நான் எப்பவாவது சொல்லியிருக்கேனா. எப்பவும்போல நீங்க டெ-ய்-லி வந்து கமெண்டு போடுங்க....//

      ஆமாம் ... நான் தினமும் பாட்டுக்கேட்பதற்காக மட்டும்தான் இங்கே ஓடோடி வருகிறேனாக்கும்?

      இங்கு இல்லாவிட்டால் எங்குமே என்னால் பாட்டு கேட்க முடியாதாக்கும்?

      ஏதோ ஒரு சாக்கு .... நாம் எல்லோரும் இங்கு பாட்டுக் கேட்க வருவதுபோல .... ஒருவரை ஒருவர் இந்தப்பார்க்கில் சந்தித்துப்பேசி மகிழ்ந்துகொண்டு வருகிறோம்.

      அதில் மிக முக்கியமான என் ’நியர் அண்ட் டியர்’ ஒருவர் வராமல் போனால் என் மனம் என்ன பாடுபடும்?

      அதை நினைத்துப்பாருங்கோ, முதலில்.

      Delete