Wednesday 12 October 2016

சொன்னது நீதானா


7 comments:

  1. சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    இன்னொரு கைகளிலே யார் யார் நானா

    எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே

    மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே

    என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே

    இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே

    இன்று

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா

    தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா

    ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா

    ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே

    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ஏன் ஏன் ஏன் என்னுயிரே

    ReplyDelete
  2. கோவாவில் வசிக்கும் பிரபல பதிவர் திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்களின் இல்லத்திற்கு, மும்பையின் பிரபல பதிவர் ‘ப்ராப்தம்’ சாரூஜி, இந்த வாரத்தில் ஓர் நாள், தன் குடும்பத்துடன் திடீர் வருகை புரிந்து, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி, இருவரும் மகிழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

    இது விஷயம் கோவாவிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளில் இன்றைய (13.10.2016) தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திடீர் இரகசிய சந்திப்பு பற்றிய புகைப்படங்களோ, சந்திப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தை விபரங்களோ தெளிவாக இதுவரை எங்கும் யார் மூலமும் வெளியிடப்படவில்லை.

    திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அவள் + அவளது கணவர் + இரு பிள்ளைக்குழந்தைகள் + ஒரு பெண் குழந்தை + மிகவும் வயதான மாமனார் + மாமியார் ஆக மொத்தம் ஏழு நபர்கள். இதைத்தவிர அவர்கள் மிகவும் பிரியமாக வளர்க்கும் இரண்டு நாய்க்குட்டிகள் வேறு, தனியாக. :)

    அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ள சாரூஜி குடும்பத்தினர் தற்சமயம் 3 + + என்பது நாம் அனைவரும் அறிந்ததே. :))

    இவர்களின் இந்த திடீர் அபூர்வ சந்திப்பினால் திருமதி. ஷாமைன் பாஸ்கோ இல்லமே கோலாகலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கோவாவில் உள்ள அனைத்துக் கடற்கரைகளிலும், ஆனந்தமாக சன் - பாத் எடுத்துக்கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்காரிகளும், இந்த அபூர்வக் காட்சியினைக்காண, தங்களின் நீச்சல் உடையுடனோ இல்லை அதுவும் இல்லாமலோ ஓடோடி வந்திருப்பார்கள் என என்னால் கற்பனை செய்து பார்த்து மகிழ முடிகிறது. :)

    பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ அவர்கள், தான் நேரில் சந்திக்கும் முதல் பதிவர் என்ற பெருமையை பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி பெறுகிறார்.

    பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி அவர்கள் நேரில் சந்திக்கும் மூன்றாவது பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்க ! வாழ்க !!

    இரு பிரபல பதிவர்களுக்கும் நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கிஷ்ணாஜி... எங்க சந்திப்பை விட இங்க உங்க கமெண்டுதான் கலக்கலா இருக்குது..

    ReplyDelete
  4. ஹையோ.. சாரூஜி...ஷாமைன்ஜி சந்திச்சாங்களா... கோபு பெரிப்பா உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் உக்காந்த இடத்துலேந்தே தெரியறது...

    ReplyDelete
    Replies
    1. happy 13 October 2016 at 21:50

      //ஹையோ.. சாரூஜி...ஷாமைன்ஜி சந்திச்சாங்களா... கோபு பெரிப்பா உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் உக்காந்த இடத்துலேந்தே தெரியறது...//

      ஒருவரை மற்றொருவர் சந்திக்கும் வரை மட்டுமே இருவரும் என் உதவியை நாடுவார்கள்.

      அதன் பிறகு என்னை சப்ஜாடாக் கழட்டி விட்டுவிடுவார்கள்.:(

      இதுதான் இதுவரை வழக்கமாக எல்லோருடைய சந்திப்புக்களிலும் நடந்து வருகிறது.

      பிறகு அவர்கள் ஆக்சுவலாக சந்தித்தார்களா? என்றைக்கு சந்தித்தார்கள்? எத்தனை மணி நேரம் சந்தித்தார்கள்? எங்கு சந்தித்தார்கள்? சந்திப்பின் போது யார் யார் கூட இருந்தார்கள்? அவர்களுக்குள் என்னதான் பேசிக்கொண்டார்கள்? என்ற ஒரு விபரமும் இரு தரப்பினரும் சொல்லவே மாட்டார்கள். :(

      சாம்பார், ரஸம், கறி, கூட்டு முதலியவற்றில், நாம் ஒரு வாஸனைக்காக போடும் கருவேப்பிலை போலத்தான் உன் பெரிப்பாவின் நிலைமையும் என்பதை நீயாவது புரிந்துகொள்ளவும்.







      Delete
  5. கோபால்ஜி... சூப்பர் கமெண்ட்... ஷாமைன்ஜி சொல்லி இருப்பது போல இந்த சந்தோஷம்தான் ரொம்ப அதிகமா இருக்கு...

    ReplyDelete
  6. ப்ராப்தம்ஜி...ஷாமைன்ஜி..வாழ்த்துகள்... ஒரு பதிவாளர் இன்னொரு பதிவாளரை சந்திக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பது நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய கோபால் ஸாருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.. அவங்கள தேடி வந்து எவ்வளவு புதியவர்கள் சந்திச்சுக்காம இருக்காங்க..

    ReplyDelete