Monday 17 October 2016

மலருக்கு தென்றல் பகையானால்..


6 comments:

  1. எவ்வளவு தேர்ந்தெடுத்த வார்த்தைகள்.. அர்த்தமுள்ள பாடல்..

    ReplyDelete
  2. அர்த்தம் நிறைந்த பாடல் வரிகள்..நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே
    ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே ..
    ஆசை நடை போடாதே .......


    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    நிலவுக்கு வானம் பகையானால்
    அது நடந்திட வேறே வழி ஏது

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    பறவைக்குச் சிறகு பகையானால்
    அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு

    பறவைக்குச் சிறகு பகையானால்
    அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு

    உறவுக்கு நெஞ்சே பகையானால்
    மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது

    நிலவுக்கு வானம் பகையானால்
    அது நடந்திட வேறே வழி ஏது

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    படகுக்குத் துடுப்பு பகையானால்
    அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு

    படகுக்குத் துடுப்பு பகையானால்
    அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு

    கடலுக்கு நீரே பகையானால்
    அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    கண்ணுக்குப் பார்வை பகையானால்
    அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

    பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
    அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    நிலவுக்கு வானம் பகையானால்
    அது நடந்திட வேறே வழி ஏது

    மலருக்குத் தென்றல் பகையானால்
    அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

    ReplyDelete
  4. எப்படியோ முன்னாவை மறக்காம வறிங்களே.... அதுவே சந்தோஷம்....

    ReplyDelete
  5. இந்த வலைத்தளத்தின் வெற்றிகரமான 475-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பெரிப்பா ராத்தில இந்த பாட்ட கேளுங்கோ.. தூக்கம் ஓடியே வந்துடும்...

    ReplyDelete