Wednesday 12 October 2016

பார்த்த ஞாபகம் இல்லையோ


8 comments:

  1. ஆஹா ஆஆஆஹாஹா
    ஆஹா ஆஆஆஹாஹா
    ஆஹா ஆஆஆஹாஹா

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
    மறந்ததே இந்த நெஞ்சமோ?

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    அந்த நீல நதிக்கரை ஓரம்
    நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

    அந்த நீல நதிக்கரை ஓரம்
    நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

    நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
    நாம் பழகி வந்தோம் சில காலம்

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
    மறந்ததே இந்த நெஞ்சமோ?

    இந்த இரவைக் கேளது சொல்லும்
    அந்த நிலவைக் கேளது சொல்லும்

    உன்தன் மனதைக் கேளது சொல்லும்
    நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    அன்று சென்றதும் மறந்தாய் உறவை
    இன்று வந்தது புதிய பறவை

    எந்த ஜென்மத்திலும் ஒரு பறவை
    நாம் சந்திப்போம் இந்த நிலவை

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
    மறந்ததே இந்த நெஞ்சமோ?

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    ReplyDelete
  2. கோவாவில் வசிக்கும் பிரபல பதிவர் திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்களின் இல்லத்திற்கு, மும்பையின் பிரபல பதிவர் ‘ப்ராப்தம்’ சாரூஜி, இந்த வாரத்தில் ஓர் நாள், தன் குடும்பத்துடன் திடீர் வருகை புரிந்து, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி, இருவரும் மகிழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

    இது விஷயம் கோவாவிலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகைகளில் இன்றைய (13.10.2016) தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திடீர் இரகசிய சந்திப்பு பற்றிய புகைப்படங்களோ, சந்திப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தை விபரங்களோ தெளிவாக இதுவரை எங்கும் யார் மூலமும் வெளியிடப்படவில்லை.

    திருமதி. ஷாமைன் பாஸ்கோ அவர்கள் வீட்டில் மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அவள் + அவளது கணவர் + இரு பிள்ளைக்குழந்தைகள் + ஒரு பெண் குழந்தை + மிகவும் வயதான மாமனார் + மாமியார் ஆக மொத்தம் ஏழு நபர்கள். இதைத்தவிர அவர்கள் மிகவும் பிரியமாக வளர்க்கும் இரண்டு நாய்க்குட்டிகள் வேறு, தனியாக. :)

    அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ள சாரூஜி குடும்பத்தினர் தற்சமயம் 3 + + என்பது நாம் அனைவரும் அறிந்ததே. :))

    இவர்களின் இந்த திடீர் அபூர்வ சந்திப்பினால் திருமதி. ஷாமைன் பாஸ்கோ இல்லமே கோலாகலமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    கோவாவில் உள்ள அனைத்துக் கடற்கரைகளிலும், ஆனந்தமாக சன் - பாத் எடுத்துக்கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும், வெள்ளைக்காரிகளும், இந்த அபூர்வக் காட்சியினைக்காண, தங்களின் நீச்சல் உடையுடனோ இல்லை அதுவும் இல்லாமலோ ஓடோடி வந்திருப்பார்கள் என என்னால் கற்பனை செய்து பார்த்து மகிழ முடிகிறது. :)

    பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ அவர்கள், தான் நேரில் சந்திக்கும் முதல் பதிவர் என்ற பெருமையை பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி பெறுகிறார்.

    பிரபல ’ப்ராப்தம்’ பதிவர் திருமதி. சாரூஜி அவர்கள் நேரில் சந்திக்கும் மூன்றாவது பிரபல பதிவர் திருமதி. ஷைமன் பாஸ்கோ ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வாழ்க ! வாழ்க !!

    இரு பிரபல பதிவர்களுக்கும் நம் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பிரபல பதிவர்னா...???? அதுயாருங்க...

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco 13 October 2016 at 21:27

      //பிரபல பதிவர்னா...???? அதுயாருங்க... //

      என்னைப் பொறுத்தவரை, முன்னா பார்க் ஓனர் முன்னா + முன்னா பார்க்குக்கு அவ்வப்போது வருகை தரும் மற்ற ஆறு பெண்மணிகள் (கண் மணிகள்) ஆக மொத்தம் ஸப்த கன்னிகைகளான, ஏழு பெண்களுமே பிரபலமான பதிவர்கள் ஆவார்கள்.

      (1) எங்கட ராஜாத்தி-ரோஜாப்பூ (2) எங்கட சாரூ (3) எங்கட செல்லக்குழந்தை ஹாப்பி (4) எங்கட கொ.எ.கு. முன்னா (5) எங்கட ஜெயந்தி ஜெயா (6) எங்கட முருகு & (7) எங்கட மர்(ம)கோவா ஷாமைன் பாஸ்கோ.

      பெண் பதிவர்களாகிய உங்கள் எல்லோரிடமும் மட்டுமே இறைவன் அளித்துள்ள அருட் கொடைகளான .... அன்பு, பண்பு, அறிவு, அடக்கம், ஆர்வம், பாசம், பிரியம், பொறுமை, தாய்மை போன்ற மிகச்சிறப்பான குணங்கள் பொக்கிஷங்களாக, மிக அதிகமாக நிரம்பி வழிவதால், உங்களை மட்டும் மிகப்பிரபலமான பதிவர்களாக இங்கு நான் அடையாளம் காட்டியுள்ளேனாக்கும். :)

      Delete
  4. பெரிப்பா இப்படி எல்லா பாடல்களின் வரிகளும் போடுங்கோ.. அப்பதான் நல்லா இருக்கு..

    ReplyDelete
  5. எப்படியோ கோபால்ஜி தயவுல மூணு பதிவாளரை சந்திக்கும் சந்தோஷம் கிடைத்தது. தாங்க்ஸ் கோபால்ஜி..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 13 October 2016 at 22:30

      //எப்படியோ கோபால்ஜி தயவுல மூணு பதிவாளரை சந்திக்கும் சந்தோஷம் கிடைத்தது. தாங்க்ஸ் கோபால்ஜி..//

      அதுவும், எனக்கு மிகவும் பிடித்தமான ஒரே பதிவரையே தனித்தனியாக மூன்று முறை சந்தித்துள்ளீர்களே !

      உங்கள் இல்லத்தில் இருமுறையும் ... அவர்கள் இல்லத்தில் ஒருமுறையுமாக ...

      இதுவரை உங்களில் யாரையுமே சந்திக்கப் ‘ப்ராப்தம்’ இல்லாத நான் பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன். :(

      வேறு என்ன செய்ய?

      கண்ணீருடன்........ :(

      Delete